வியாழன், 21 ஜூன், 2012

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை) - 1992-1997

முதலாம் வகுப்பு :
தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலை அறிவியல் : திரு.கோவிந்தசாமி
[ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழுர்]

இரண்டாம் வகுப்பு :
தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலை அறிவியல் : திரு.கோவிந்தசாமி
[ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழுர்]

மூன்றாம் வகுப்பு :
தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலை அறிவியல் : திரு.சுந்தரமூர்த்தி
[ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழுர்]

நான்காம் வகுப்பு :
தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலை அறிவியல் : திரு.சுந்தரமூர்த்தி
[ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழுர்]

ஐந்தாம் வகுப்பு :
தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலை அறிவியல் : திரு.சுந்தரமூர்த்தி
[ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழுர்]

ஆறாம் வகுப்பு :
தமிழ் : திரு.தேவராஜ்
ஆங்கிலம், கணிதம் : திரு.சிவபெருமாள்
அறிவியல் :திரு. C .முருகவேல் (CM)
சமூக அறிவியல் : திரு.வேல்முருகன்
[ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

ஏழாம் வகுப்பு :
தமிழ் : திரு.தேவராஜ், திரு.ராஜமோகன்
ஆங்கிலம், கணிதம் :திரு.T.ராமசாமி
அறிவியல் :திரு.C .முருகவேல் (CM)
சமூக அறிவியல் : திரு.இரமேஷ்[Not Permanent . From English medium ]
[ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

எட்டாம் வகுப்பு :
தமிழ் : திரு.இளஞ்செழியன்
ஆங்கிலம், கணிதம் :  திரு.K . கார்த்திகேயன் [KK ]
அறிவியல் : திரு.தேவநாதன்
சமூக அறிவியல் : திருமதி.ஜனாபாய்
[ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

ஒன்பதாம் வகுப்பு :
தமிழ் :திரு.இளஞ்செழியன்
ஆங்கிலம், கணிதம் : திரு.ரெங்கா ரெட்டி
அறிவியல் :திருமதி.மாலா
சமூக அறிவியல் :  திரு.ஆழ்வார் 
[ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

பத்தாம் வகுப்பு :
தமிழ் :திரு. இளஞ்செழியன்
ஆங்கிலம், கணிதம் : திரு. ரெங்கா ரெட்டி
அறிவியல் :திரு. நவ ஜோதி
சமூக அறிவியல் :  திரு.ஆழ்வார் 
[ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

பதினொன்றாம் வகுப்பு :
தமிழ்  :திரு.தர்மராஜன்
ஆங்கிலம்: --, திரு.குணசேகரன்
கணிதம் : திரு.U.தெய்வசிகாமணி (UD)
இயற்பியல் : திரு.செல்வராஜ்
வேதியியல் : திரு.T.தமிழ்செல்வன் (TT)
உயிரியல் :-
          தாவரவியல் : திரு.மணிவண்ணன்
          விலங்கியல் :திரு.தனசேகரன்
[அரசு மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

பன்னிரண்டாம் வகுப்பு :
தமிழ்  :திரு.தர்மராஜன்
ஆங்கிலம்: திரு.குணசேகரன்
கணிதம் : திரு.U.தெய்வசிகாமணி (UD)
இயற்பியல் : திரு.செல்வராஜ்
வேதியியல் : திரு.T.தமிழ்செல்வன் (TT)
உயிரியல் :-
          தாவரவியல் :திரு.மணிவண்ணன்
          விலங்கியல் : திரு.தனசேகரன்
[அரசு மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை :
           "ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கீழூர்" இது தாங்க நான் ஒன்னாவதுலேர்ந்து அஞ்சாவது வரைக்கும் படிச்ச என்னோட பள்ளிக்கூடம்.

"கோவிந்தசாமி" எங்களோட ஒன்னாவது வாத்தியார். எங்க பக்கத்து ஊரான  பாச்சார பாளையம் தான் இவரோட ஊரு. ஒன்னாவது மற்றும் ரெண்டாவதுக்கு இவர் தான் வாத்தியார். அ,க,ங,ச... 1,2,3 ...லாம் இவர் தான் சொல்லிகொடுத்தார். எங்க பள்ளிகூடத்துல ஆங்கிலம் சொல்லிக்குடுத்து இவர் மட்டும் தான். A,B,C,D..., One, Two, Three... இது தான் எங்க பள்ளிகூடத்தோட ஆங்கிலம். எனக்கு ஒன்னாவது வாத்தியார ரொம்ப புடிக்கும், அவரு அவரோட வேலைல ரொம்ப தெளிவா இருப்பாரு. ஒரு நாள் கூட பள்ளிகூடத்துக்கு தாமதமா வந்தது இல்ல. இப்பகூட இவர எங்கயாவது பாத்தா நான் வணக்கம் சொல்லுவன். எனக்கு அவர அவ்ளோ புடிக்கும்.
           அடுத்தது "சுந்தரமூர்த்தி"  இவரு அஞ்சாவது வாத்தியார். பக்கத்துக்கு நகரம் குறிஞ்சிப்பாடிலேர்ந்து வருவாரு. மூணாவது, நாலாவது, அஞ்சாவது பசங்கள பாத்துகரதுதான் இவரோட வேல. எங்க ஊருல தமிழ் புலிகளையும், கணக்கு புலிகளையும் உருவாக்கியது இவருதான். அஞ்சாவது இறுதி வரைக்கும் எனக்கு எந்த பிரச்சனையும் எனக்கு வந்தது இல்ல. ஐந்தாம் வகுப்பின் இறுதி காலகட்டம், சில மாதங்களில் ஐந்தாம் வகுப்பும் முடிந்துவிடும். அந்த நேரத்தில் "சுந்தரமூர்த்தி" வாத்தியார் பணிநிறைவா இல்ல பணி மாற்று இடம் பெற்று போனாரானு தெரியல, அவர் பள்ளிகூடத்துக்கு வரல.
         அவருக்கு பதிலாக தற்காலிகமாக ஒரு ஆசிரியரை நியமனம் செய்தார்கள். அவரோட பேரு "சுபாஷ்". இவரோட ஊரும் பாச்சார பாளையம் தான். அவரு வந்த நேரம் 'தேர்தல்(election time) நேரம். ஒரு நாள், மதிய வேளை பள்ளிகூடத்துல பசங்கலாம் ரொம்ப சத்தம் போட்டுகிட்டிருந்தாங்க. அன்னைக்கு அந்த சத்தம் எனக்கு சுத்தமா புடிக்கல, ரொம்ப எரிச்சலா வந்துச்சி.
           அன்னைக்கு ஒன்னாவது வாத்தியாரு வரல. அவரு விடுமுறைல இருந்தாரு."சுபாஷ்" வாத்தியாரு மட்டும்தான் வந்தாரு, அவரும் பள்ளிகூடத்துல இல்ல, தேர்தல் பத்தி பேச எங்கயோ வெளிய போய்ட்டாரு.
            பசங்க போடுற சத்தம் புடிக்காம, "என்னடா பள்ளிகூடத்த கவனிக்காம  தேர்தல் பத்தி பேச போய்ட்டாரு" னு எனக்கு நானே சொன்னன், இத பக்கதுல கூட யாருக்கிட்டயும் சொல்லல. அந்த மனுஷன் வந்தாரு, வந்த கொஞ்ச நேரத்துலையே என்ன இழுத்துபோட்டு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாரு, அதுவரைக்கும் அப்படி ஒரு அடிய யாருகிட்டயும் வாங்கனதில்ல. ஏன்டா நம்மள இந்த அடி அடிக்கராருனு பாத்தா..!!? ஒரு அயோக்கிய பய புள்ள நான் பொலம்புன அந்த விஷயத்த அவருகிட்ட மாத்தி போட்டு விட்டுட்டான்.
           "என்னடா பள்ளிகூடத்த கவனிக்காம  தேர்தல் பத்தி பேச போய்ட்டான்" னு நான் சொன்னதா அவன் அவருகிட்ட சொல்லிட்டான். நான் அப்படி சொல்லலன்னு எவ்வளவு சொல்லியும் அவரு கேக்கல. அடி பின்னிட்டாரு.
           அன்னைக்கு தான் நான் முடிவு பண்ணினன்.சாகறதுக்குள்ள என்னைக்காவது ஒரு நாள் அவரு மண்டைல கல்லால அடிச்சிடனும்னு. ஆனா இன்னைக்கு வரைக்கும் இன்னும் அடிக்கல. அன்னைலேர்ந்து அவருக்கு வாத்தியார்ன்ற மரியாதைய நான் குடுக்கறதே இல்ல.
            இப்ப இவரு இருக்காரா இல்லையானு கூட எனக்கு தெரியாது. ஆனா இன்னும் என் கோவம் அடங்கல...
            "செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்கறது எவ்ளோ கஷ்டம்னு அத அனுபவிக்கரவனுக்குதான் தெரியும்."

அடுத்து...

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் [1997-1998] (ஆறாம் வகுப்பு 'ஈ' பிரிவு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக