திங்கள், 31 டிசம்பர், 2012

ஆங்கிலேயர் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!


ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டுள்ள உலகத்தோர் அனைவருக்கும், ஒரு தமிழ் இளையோனின் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

எம்மினத்தாருக்கு மரபு கோளாறு இருக்கிறது..! அதனால் தான் தமிழ்ப் புத்தாண்டு சித்திரைக்கும் தைக்கும் தள்ளாடி நிற்க்கிறது.

எங்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு தெரியாது, ஆனால் ஆங்கில புத்தாண்டை ஆரவாரமாய் கொண்டாடுவோம்.

மதம் மாறிய எங்களுக்கு பொங்கல் ஒரு இந்து பண்டிகையே..!

எங்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்று இருக்கின்றது. மறந்தும்கூட எங்களைப் போல இருந்துவிடாதீர்.

ஆண்டு முழுமையும் அமைதியும் இனிமையும் உண்டாக என் மனமார்ந்த வாழ்துக்கள்.

நன்றி : கூகிள் [படம்]

புதன், 19 டிசம்பர், 2012

அம்மா சொல்லிய கதைகள் - 1


இந்த பதிவை படிக்க ஆரம்பிக்கறதுக்கு முன் நீங்க உங்களோட குழந்தை பருவத்திற்க்கு போய்விடுவது நல்லது. ஏன்னா இந்த பதிவை குழந்தை மனப்பான்மையுடன் படித்தால் மட்டுமே நல்லா இருக்கும். உங்களுடைய தற்ப்போதைய வயதை கொண்டு படிப்பீர்களேயானால் இப்பதிவு மரண மொக்கையாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை.

நமக்கு சின்ன வயசா இருக்கும்போது, நம்ம எல்லோருக்குமே இந்த அனுபவம் இருக்கும். இரவில் நம்மல தூங்க வைக்க அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், பாட்டி, தாத்தா-னு யாராவது ஒருத்தவங்க கதை சொல்லுவாங்க. சில நாட்கள்ல அடம்புடிச்சு கதை சொல்ல சொல்லி தூங்குவோம். சில சமயம் ஏற்கனவே சொன்ன கதையையே திரும்ப திரும்ப சொல்ல சொல்லி கேட்போம்.

அந்த மாதிரி நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்க அம்மா எங்களுக்கு சொன்ன கதைகள் சிலவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

எங்க அம்மா எனக்கு சொன்ன சொன்ன பல கதைகள் மறந்து விட்டன. இருப்பினும், வரும் பொங்கலுக்கு வீட்டுக்கு போய் அம்மாகிட்ட மறுபடியும் கதையெல்லாம் கேட்டுட்டு வந்து ஒவ்வொரு கதையையும் ஒரு ஒரு பதிவா கொடுக்கறன்.

அப்புறம், ஊர்லேர்ந்து எங்க தாத்தா(அம்மாவின் அப்பா) வந்தாருனா, அன்னைக்கு அவர்தான் கதை சொல்லுவாரு. தாத்தா எப்பவும் இராமாயணம், மகாபாரதம்-னு புரானக்கதைகள்தான் சொல்லுவாரு. உதாரனமா, நரகாசூரன் கதை, பத்மாசூரன் கதை, சூரபத்மன் கதை...

அடுத்தது அப்பா, பொதுவாவே அப்பாகிட்ட கதை சொல்ல கேட்டா பல சமயம் அம்மாகிட்ட கேளுனு சொல்லி தப்பிச்சுக்குவாரு. சில நாட்கள்ல நம்ம தொந்தரவு தாங்காம கதை சொல்லியே ஆகவேண்டிய நிலமை வந்துடும். பொதுவா அப்பாவுக்கு கதை சொல்லவே தெரியாது..!!

அந்த மாதிரியான சமயத்துல எங்க அப்பா ஒரு வரி கதை சொல்லுவாரு. தொடக்கத்துல ரொம்ப விறுவிறுப்பான கதை சொல்ல போற மாதிரியே ஆரம்பிச்சு பொசுக்குனு முடிச்சிடுவாரு.

அந்த மாதிரி எங்களுக்கு சொன்ன கதையை உங்களுடன் இப்பதிவின் தொடக்க கதையாக அன்றைய இரவு நிகழ்வுடன் பகிர்கிறேன்.

அப்போ எங்க வீடு கூரை வீடுதான். பனி, மழை அல்லாத காலங்களில் வீட்டின் வாசலில் அமர்ந்து குமிழ் விளக்கு(குண்டு பல்ப்) மற்றும் நிலா வெளிச்சத்தில் விண்ணில் நட்சத்திரங்கள் மின்ன சாப்பிடுவதுதான் வழக்கம்.

பொதுவாக எப்பொதுமே 9 மணிக்கு முன்னதாகவே தூங்க ஆரம்பித்துவிடுவோம். நானும் அண்ணனும் ஆளுக்கு ஒரு புறமாக அப்பாவின் இரு கைகளிலும் தலை வைத்துதான் தூங்குவோம். அப்பா வீட்டில் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகளில் தூங்குவோம்.

அப்படி ஒரு நாள் அப்பாவின் கைகளில் படுத்துக்கொண்டு கதை சொல்ல சொல்லி நச்சரித்துக்கொண்டிருந்தேன். ஏனோ அன்று அம்மாவிடம் கேட்கவில்லை. ஒரு வழியாக அப்பாவும் சொல்ல ஆரம்பித்தார் அந்த ஒரு வரி கதையை..

“ ஒரு ஊர்ல ஒரு நரியாம்..

ம்ம்..

அதோட கதை சரியாம்..!!!!!!!! ”

அப்பா இந்த கதையை சொல்லி முடித்தவுடன் அங்கே சிரிப்பும் சந்தோசமும் ஆரவாரத்துடன் இருந்தது. ஆனாலும் இத்துடன் விட்டுவிடவில்லை மீண்டும் வேறு கதையை சொல்ல சொல்லி அடம்பிடித்து தூங்கினோம். ஆனால் அப்பா அன்று வேறு என்ன கதையை சொன்னார் என்பது நினைவில் இல்லை.

அடுத்த சில நாட்களில் அப்பா சொன்ன அந்த ஒரு வரி கதையை அடிப்படையாக கொண்டு நாங்களும் ஒரு ஒரு வரி கதையை கண்டுபிடித்தோம். அது,

“ ஒரு ஊர்ல ஒரு ரப்பராம்..

அதோட கதை ரிப்பேராம்..!!!! ”

குறிப்பு : அம்மா சொல்லிய கதைகள்-னு தலைப்பை வச்சிட்டு அப்பா சொன்ன கதையை சொல்லியிருகிறேனேனு நெனைக்காதீங்க. அம்மா சொன்ன எந்த கதையும் சரியா ஞாபகத்துல இல்ல. பொங்கலுக்கு பிறகு சொல்றன். எங்க அம்மா எங்களுக்கு பாடிய தாலாட்டு முதற்க்கொண்டு எல்லாத்தையும் சீக்கிரமாவே இங்க பதிவிடவிருக்கிறேன்.


நமது குழந்தை பருவ நினைவுகள் எப்போதும் நமக்கு மகிழ்வையே தரும். நீங்களும் நினைத்துப்பாருங்கள் உங்கள் குழந்தைப் பருவத்தை. எவ்வளவு கவலைகள் இருந்தாலும் மனம் இலேசாகிவிடும்.


மீண்டும் சந்திப்போம் அடுத்த பதிவில்...

வெள்ளி, 14 டிசம்பர், 2012

பாச்சாரபாளையம் : வன்னிய சாதி வெறி..!!??

            எல்லோரும் என்னய்யா நெனச்சிகிட்டு இருகீங்க.. தருமபுரி கலவரம் பற்றி அங்க இருந்த உண்மை நிலவரம் எனக்கு சரியா தெரியாது. ஆனால் பாச்சாரபாளையம் என் பக்கத்து ஊரு.

யாராவது பாச்சாரபாளையம் பிரச்சனைய எழுதுவாங்க, அப்புறமா நாம பதில் சொல்ல்லாம்னு நெனச்சன். அதனாலதான் இப்ப எழுதறன். தருமபுரி அளவுக்கு பெருசா பேசப்படலனாலும், எல்லோரும் சொல்லிவச்ச மாதிரி வன்னிய சாதி வெறி தாக்குதல்னே சொல்றீங்க.

இதெல்லாம் பாக்கும்போது தருமபுரியும் இதுமாதிரி திரித்துவிடப்பட்ட செய்தியாக இருக்குமோனு சந்தேகம் வலுக்கிறது.

உங்களுக்கெல்லாம் பாச்சாரப்பாளையத்தைப் பத்தி என்ன தெரியும். பாச்சாரபாளையம் ஒன்னும் சாதி மத பேதமில்லாத காந்திய கிராமம்னு சொல்லல. எல்லா ஊருங்களைப்போலவே சாதீய கட்டுப்பாடுகள் கொண்ட கிராமம்தான். இருந்தாலும் மாற்று சாதிக்காரன் வளர்ச்சியை கண்டு கோவப்படுற அளவுக்கு அங்க யாரும் இல்ல. அங்க மட்டும் இல்ல, எங்க சுற்றுவட்டாரத்துலயே அந்த மாதிரியான ஈனபுத்தி யாருக்கும் கிடையாது. அவன் சம்பாதிக்கிரான் நல்லா இருக்கான் அவ்ளோதானு சொல்லிட்டு போய்டுவாங்க.

பாச்சாரபாளையம் சாதாரணமாகவே கலவர பூமிதான். கீழுர் ஊராட்சியில அதிகமான கலவரம், காவல்துறையினர் குவிப்பு எல்லாம் அங்கதான் நடந்திருக்கு. பொதுவா உள்ளாட்சி தேர்தலின் போதுதான் பதட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பா பாச்சாரபாளையம், கீழுர், ஆயிப்பேட்டை ஆகிய வாக்கு சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக இருக்கும்.

கொஞ்ச வருடங்களுக்கு முன்னாடி திருமாவளவன் கொடி ஏற்றுவதற்க்கு பாச்சாரபாளையம் வருகிறார் என்ற செய்தியால் ஒரு பெரிய கலவரமே நடந்துச்சு. அதுமாதிரி இப்ப நடந்து, வன்னிய சாதி வெறி-னு சொன்னீங்கனா.. அதுல ஒரு ஞாயம் இருக்கு.

ஆனா இங்க நடந்திருக்கறது அந்த மாதிரியான விடயமா..!!?

ரெண்டு பேருக்குள்ள சண்ட நடந்து அவங்கள்ள ஒருத்தன் வன்னியனாவும், இன்னொருத்தன் தாழ்த்தப்பட்டவனாவும் இருந்தா, அந்த சண்டைக்கு பேரு வன்னிய சாதி வெறி தாக்குதல், என்ன ஏதுனெல்லாம் விசாரிக்க மாட்டீங்க. அப்படிதானே சொல்ல வரீங்க.

அங்க நடந்தது ரெண்டுபேருக்கு இடைப்பட்ட சண்டை இல்ல, ஊருக்கும் காலணிக்கும் இடையேயான சண்டைனு நெனச்சீங்கனா இதையும் தெரிஞ்சிக்குங்க. ஒரு ஊருல ஒரே பட்டம் கொண்ட எல்லா வன்னியனும் பெரும்பாலும் ஒருத்தனுக்கு ஒருத்தன் சொந்தக்காரனாதான் இருப்பான்.

ஒரு பொம்பள புள்ளையோட சடைய புடிச்சி இழுத்து, உன்மையாவே இவ்ளோ நீட்டா இல்ல சௌரி முடியானு பாத்தேனு சொன்னா அவன் எந்த சாதிக்காரனா இருந்தாலும் அடிக்கத்தான் செய்வாங்க. அப்படி அடிச்சதுக்கு பேரு சாதி வெறினா..!!?, தான் வீட்டு புள்ளைய அவமானப்படுத்துனவன தட்டி கேட்ட அந்த சாதிவெறி கண்டிப்பா இருக்கத்தான் செய்யும். இதுக்கு பேரு சாதி வெறி-னா, எல்லா வன்னியனும் சாதி வெறியந்தான். இந்த மாதிரியான சாதி வெறிக்கு அவன் பெருமைப்படதான் செய்வான்.

அடுத்தது, வீட்ட கொளுத்தி அவங்கள பொருளாதாரரீதியில் நசுக்குவது. இந்த விடயத்த கூட இருந்து பாத்தவங்க மாதிரியே சொல்றது. இத பத்தி சொல்றதுக்கு முன்னாடி இன்னொன்ன சொல்லிடறன்.

சில வருடங்களுக்கு முன்னாடி இதே மாதிரி ஊருக்கும், காலனிக்கும் இடையே பிரச்சனை. அந்த சண்டையில் மூன்று “மோட்டார்” கொட்டகைகள் கொளுத்தப்பட்டன. அவை மூன்றுமே வன்னியருக்கு சொந்தமானவை.

இப்போது, இவங்க ரெண்டு கூரையை கொளுத்தியிருக்காங்க. மொத்தமா எட்டு குடிசைகள் எரிக்கப்பட்டுள்ளதாக சொல்றாங்க. ஆனால், ஊர்காரங்க கொளுத்தனது ரெண்டு மீதி ஆறு எப்படி எரிஞ்சுது..!!? அதுவும் பொருட்கள் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டு. இவங்க வீட்ட கொளுத்தினது சரினு சொல்ல வரல. ஆனால், அவங்களுக்கு வேற என்ன செய்யறதுனு தெரியல அவ்ளோ ஆத்திரம், கோவம்..

இந்த கோவம் இந்த ஒரு சம்பவத்துக்காக இல்ல. இது ஏழாவது சம்பவம்.

சரியாக ஓராண்டுக்கு முன்னால், இப்போது நடந்துள்ள சம்பவத்தை போல, பல மடங்கு வன்மையான சம்பவம் நடந்திருக்கும். குடும்ப மானம் போய்விடுமேனு அமைதியாக விட்டுவிட்டனர். அதனாலேயே துளிர்விட்ட கயவர்கள் இப்படி செய்திருக்கின்றனர்.

தோப்புக்கு ஆடு மேய்க்க போன உன் வீட்டுப் புள்ளைய ரெண்டு வெறி புடிச்ச நாய்ங்க பலாத்காரம் செய்ய பாத்து முடியாம, கழுத்த முரிச்சு, மயக்கமானதும், செத்துட்டானு நெனச்சி கிணத்துல தூக்கி வீசிட்டு போய்ட்டா... சேதி தெரிஞ்சா சும்மா இருப்பீங்களா..!!? அவனுங்கள அடிச்சா அதுக்கு பேரு சாதி வெறியா..!!!? இதே பாச்சாரபாளையத்துல நடந்த சம்பவம்தான் இது. இந்த சேதி உங்க யாருக்காவது தெரியுமா..!!? அந்த வெறி புடிச்ச நாய்ங்க பாச்சார பாளையம் காலனியை சேர்ந்தவனுங்கதான். வெளிய தெரிஞ்சா மானம் போய்டுமேனு எந்த பிரச்சனையும் செய்யாம மறைக்கப்பட்ட சம்பவம்தான் இது. இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு..!!?

இப்ப நடக்குற இந்த பிரச்சனையால வீட்ட எரிச்சது மட்டும்தானே உங்களுக்கு தெரியும்.
ஒரு ஏக்கர் பன்னீர் கரும்பு தோட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது தெரியுமா உங்களுக்கு..!!? தெரியாது. ஏன்னா, அது வன்னிய சாதியை சேர்ந்தவனுக்கு சொந்தமானது.

கிட்ட்தட்ட 250 பேரு மேல வழக்கு பதிவு பன்னியிருக்காங்க. இதுல 26 பேரு முக்கிய குற்றவாளிகள். இதுல வேடிக்கை என்னனா, சம்பவம் நடந்தப்ப தன் மனைவியின் பிறசவத்துக்காக பாண்டிச்சேரியில் மருத்துவமனையில் இருந்த எங்க ஊராட்சி மன்ற தலைவர் அருள் முருகன் தலைமையிலதான் எல்லோரும் போயி வீடுகளை எரிச்சதா செய்தி ஊடகங்களிலேயே வந்ததுதான். இதுலிருந்தே தெரிஞ்சுக்குங்க என்ன நடந்திருக்கும்னு..

தாழ்த்தப்பட்டவன் என்கிற ஒரு காரணத்தினாலேயே என்ன ஏது என விசாரிக்காமல் அவர்கள் சார்பாக எவ்வளவு குரல்கள். எதுவா இருந்தாலும் ஞாயம் ஒன்னாதான் இருக்கனும்.

இதுக்கு அப்புறமாவது யாரும் பாச்சாரபாளைய பிரச்சனையை சாதிவெறினு சொல்லாதீங்க.. இந்த பிரச்சனையில் இழப்பு வன்னிய சாதியினருக்குதான் அதிகமாக இருக்கும். இருப்பினும் உதவிகள் அனைத்தும் காலனி மக்களுக்கு மட்டுமே இருக்கும். வழக்கம் போல இளிச்சவாயனுங்க வன்னியந்தான்..

ஆனால் ஒன்னு, இந்த பிரச்சனையால எங்க சுற்று வட்டாரத்துல இருக்குற ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களும் தங்கள் தலையில தாங்களே மண்னை வாரி போட்டுகிட்டதுக்கு சமம் ஆகிடிச்சு. இனி எப்ப வேணும்னாலும் என்ன வேணும்னாலும் நடக்கலாம் எதுக்கும் யாரும் உத்திரவாதம் கொடுக்க முடியாது.

மருத்துவர் இராமதாசே வந்து பேசினாலும் ஒன்னும் நடக்காது. தேவையே இல்லாம மருத்துவரோட மரியாதைதான் கொறைஞ்சு போகும். இது புரியாம நெறைய பேரு இராமதாசை குறை சொல்றாங்க. பாவங்க அவரு, அவரால இங்க ஒன்னும் செய்ய முடியாது.

செவ்வாய், 11 டிசம்பர், 2012

எனக்கு அடிமையாய் வேண்டும் பெண்கள்..!?



எனக்கு ஒரு விசயம் சுத்தமாவே புரியலங்க..

பெண்களுக்கு சுதந்திரம் இருக்கா..!!? இல்லையா..!!?

இல்லைனா..! அத பத்தி பொறுமையா நேரம் கெடச்சா பாக்கலாம்.

இருக்குனா..!! அவங்களுக்கு என்ன மாதிரியான சுதந்திரம் இருக்கு..!!?

எனக்கு அடிப்படையிலேயே சில சந்தேகங்கள் இருக்கு, அத இங்க சொல்றன் உங்களுக்கு தெரிஞ்சா பதில் சொல்லுங்க...

பெண்கள் பண்பாட்டு பொம்மைகளாக பார்க்கப்படுவது ஏன்..!!? பண்பாட்டு பொம்மையாக அவர்களின் சுதந்திரம் பறிக்கப்படவில்லையா..!!?

உதாரணத்திற்கு, ஆண்கள்  T-Shirt , Jeans  அணிந்தால் பண்பாட்டு சீரழிவாக பார்க்காத நாம் பெண்கள் அணியும் போது ஏன் பண்பாட்டு சீரழிவாக பார்க்கிறோம்...!!?

ஆண்கள் மது, புகையிலை பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தும்போது சாதாரணமான தவறுகளில் ஒன்றாக தெரிபவை, பெண்கள் பயன்படுத்தும்போது மட்டும் ஏன் மாபெரும் குற்றங்களாக தெரிகின்றன...!!?


ஆடைகள் முதற்கொண்டு பெரும்பான்மையானவற்றில் ஆண்களுக்கு சௌகரியமானதாகவும் பெண்களுக்கு அசௌகரியமானதாகவும் உருவாக்கப்பட்டுள்ளமை ஏன்..!!?

இன்று ஓரளவிற்கு முன்னேறியுள்ள போதும், ஏன் பெண் எப்போதும் ஒரு ஆணை சார்ந்தே இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது..!!?

பொதுவாக வீட்டிலும் வெளியிலும் ஆணின் வார்த்தைக்கு இருக்கும் மதிப்பு பெண்ணுக்கு இருப்பதில்லையே ஏன்..!!?

ஏன் எப்போதும் ஒரு பெண் தன் கணவனுக்கு அடங்கியே இருக்க வேண்டும்.!!?

ஏன் சமூகத்தில் பெண்கள் ஆண்களுக்கு கீழானவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்..!!?

ஒரு ஆணுக்கு முன்னாள், கை நீட்டி பேசவோ, நாற்காலியில் அமரவோ(அ)கால்மேல் கால் போட்டு அமரவோ கூடாது என்பது பெண்களாலேயே சொல்லப்படுவது ஏன்..!!?

ஒரு ஆண் காதலிப்பதை பெரிய தவறாக பார்க்காத சமூகம் பெண் காதலிப்பதை மட்டும் தவறாக பார்ப்பது ஏன்..!!?

ஒவ்வொரு மதத்திலும் பெண்களுக்கு எதிராக இத்தனை கட்டுப்பாடுகள் எதற்க்காக இருக்கின்றன ..!!?

என் சில புரிதல்கள் :
இந்த பெண் அடிமைத்தனமும் சாதியும் கிட்ட தட்ட ஒன்றுதான். ஆண்கள் ஆதிக்க சாதியாகவும் பெண்கள் அடிமட்ட சாதியாகவும் இருக்கிறார்கள்.

இவை அனைத்திற்கும் நான் இப்போது சொல்லப்போவது ஓரளவிற்கு சரியான பதிலாக இருக்கும் என நினைக்கிறேன்..

" ஒருவனுக்கு மனைவியாக வரப்போகும் (அ) இருக்கும் பெண் தன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இருப்பாளேயானால், அவளுடைய உற்றார் உறவினர் மத்தியிலும் அவன் உற்றார் உறவினர் மத்தியிலும் தான் ஆளுமை மிகுந்தவனாக பார்க்கப்படுவேன் என்ற எண்ணமும் தன்னுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்ற எண்ணமுமேயாகும்.

அதே சமயம் அவனுடைய இந்த செயலால் மற்ற ஆண்களையும் இவ்வாறு இருக்க மறைமுகமாக தூண்டுகிறான்.

இதன் காரணமாகவே தனக்கான ஒரு அடிமையை அடிமை என்று சொல்லாமல் உறவை வைத்து அடிமையாய் கொண்டிருக்கிறான். இதனிடையே பெண்மை கேள்வி கேட்டுவிடாமல் இருக்க பாசத்தைப் பொழிந்து பெண்கள் அடிமையாய் இருப்பதுதான் பெண்கள் பிறப்பிற்க்கே அழகு என்ற போதனையையும் அதன் அடி மனது வரை இறக்கிவிட்டிருக்கிறான்.

இன்னும் என்னென்னவோ தோணுது, சொல்லத்தான் முடியல..!!

எல்லாம் சரி இது என்னடா தலைப்பு-னு கேக்கரீங்களா..!! நான் வேற மாதிரி எழுதலாம்னு நினச்சேன். ஆனால், எழுத நெனைக்கும்போது எல்லாம் கேள்வியா வந்துச்சா.. அதனால அப்டியே விட்டுட்டன்.

குறிப்பு : நான் ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சுடுங்க..!! :-)

நன்றி : கூகிள்-படம்

திங்கள், 3 டிசம்பர், 2012

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் [1999-2000] (எட்டாம் வகுப்பு 'ஈ' பிரிவு)


பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை) - 1992-1997

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் [1997-1998] (ஆறாம் வகுப்பு 'ஈ' பிரிவு)

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் [1998-1999] (ஏழாம் வகுப்பு 'ஈ' பிரிவு)

எட்டாம் வகுப்பு:

ஒட்டுமொத்தமா நல்லா படிக்கிற எல்லா பசங்களும் ஒரே வகுப்புல இருக்கறதால எங்க பள்ளியில ஒரு மாற்றத்தை கொண்டுவந்தாங்க.. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்குற வழக்கமான நடைமுறைதான்.

எங்க பள்ளிக்கூடம் இருபாலர் பள்ளிக்கூடம் தான். ஆனால் எல்லா வகுப்புகளிலும் இருபாலர் முறை இல்லை.

அ,ஆ (A,B) -         பெண்பாலர் மட்டும்
இ (C) -               இருபாலர்
ஈ, உ, ஊ (D, E, F) -   ஆண்பாலர் மட்டும்
எ (G) - இருபாலர் [ஆங்கில வழி - English Medium]

நல்லா படிக்குற பசங்க ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு வகுப்புல போட்டாங்க . எனக்கு ஞாபகம் இருக்குற, நான் முந்தைய பதிவுல தெரிவிச்சிருக்குற ஒருசில பேர மட்டும் இங்க தெரிவிக்கிறேன்.

அருண்ராஜ் - 'இ' பிரிவு
கபிலன் - 'ஈ' பிரிவு
பாலசுப்ரமணியன், சத்யராஜ், குமரேசன்  - 'உ' பிரிவு
ஜேம்ஸ், நடராஜன், சுந்தரகனேசன்  - 'ஊ' பிரிவு

இப்படி பிரிச்சதுல நல்லா படிக்குற பசங்க வரிசையில் புதுசா ஒரு பையன் வந்தான்  'உ' பிரிவிலிருந்து. அவன் பெயர்  வெங்கடராம சுப்பிரமணியன்.

அ , ஆ பிரிவுகளிலிருந்து நல்லா படிக்குறவங்க வரிசைக்கு ஒரு பொண்ணு வந்தா. ஆனால் அவ பேரு ஒன்பதாவதுக்கு மேலதான் அடிபட்டுச்சு. அந்த பொண்ணு பேரு சரஸ்வதி. என்னோட மறக்கமுடியாத சம்பவங்களில் இந்த பொண்ணோட பேரும் வரும் அத ஒன்பதாவதுல சொல்றன்.

சரி, இனி ஆசிரியர்கள் அட்டவணைக்கு செல்வோம்..


எட்டாம் வகுப்பு [VII-D](1999-2000)
பள்ளிக்கூடம் : ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.
வ.எண் பாடம் ஆசிரியர்

     1                     தமிழ்          புலவர்.திரு.இளஞ்செழியன்
     2 ஆங்கிலம்         திரு.K.கார்த்திகேயன் (K.K)*
     3 கணிதம்         திரு.K.கார்த்திகேயன் (K .K)
     4 அறிவியல்         திரு. வேலாயுதம் 
     5 சமூக அறிவியல்         திருமதி.ஜனாபாய் 
     6 உடற்கல்வி (P.E.T)         திரு.செல்வம்
* : வகுப்பாசிரியர்

புலவர்.திரு.இளஞ்செழியன் : இவர ரொம்ப கண்டிப்பானவருனு சொல்ல முடியாது. ஆனால் சமயத்துல கடுகடுனு இருப்பார். இவருகிட்ட பலதடவை அடி வாங்கியிருக்கேன்.

திரு.K.கார்த்திகேயன் (K .K) : இவர் எங்களோட வகுப்பாசிரியர். எங்கள் பள்ளியின் கண்டிப்பான ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.

திரு. வேலாயுதம் : இவரும் கண்டிப்பான ஆசிரியர். எங்கள் வகுப்பாசிரியரைவிட இவரை பார்க்கும்போதுதான் பயம் அதிகமாக இருக்கும்.

திருமதி.ஜனாபாய் : நான் அதிகமா தூங்கியிருக்கறது இவங்களோட வகுப்புலதான். கண்டிப்பான ஆசிரியர் இல்ல.

திரு.செல்வம் : இவருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்ல. இவர்கிட்ட நான் பேசினதே கெடையாது.


மறக்க முடியாத சம்பவங்கள் :

சம்பவம் 1:
                   முதல் பருவத்தேர்வு முடிந்து திருத்திய விடைத்தாள்களை கொடுத்து மதிப்பெண்களை அனைத்து ஆசிரியர்களும் அறிவித்துக்கொண்டிருந்தனர். சமூக அறிவியல் பாட வேளை, ஜனாபாய் டீச்சர் வகுப்பறையின் உள் நுழைந்தார். அவரைப் பார்த்த அடுத்த நொடி முதல் இதயத்துடிப்பு வெகுவாக அதிகரித்தது. காரணம், அவரது கைகளில் திருத்தப்பட்ட விடைத்தாட்கள். மதிப்பெண் பற்றிய பயம்.
                   ஒவ்வொருவருடைய பெயரையும் படித்து விடைத்தாட்கள் வழங்கப்பட்டது. கடைசிவரை என் பெயர் உட்பட சிலரது பெயர்கள் வாசிக்கப்படவில்லை.
                   இப்போது ஜனாபாய் டீச்சர், யாருடைய பெயரெல்லாம் வரலையோ, அவங்கலாம் எந்திரியுங்கள் என்றார். எழுந்து நின்றோம். இப்போது ஒருவர் பின் ஒருவராக அழைத்து அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி கண்டித்தார். இப்போதும் என் பெயர் கடைசியாகத்தான் வந்தது. என் விடைத்தாளை என்னிடம் கொடுத்தார். கொடுக்கும்போதே அடி வயிறு கலங்கினார்போல இருந்தது. கொடுத்துவிட்டு சில கேள்விகளை கேட்டார்:

ஜனாபாய்  டீச்சர் : மதிப்பெண்கள் எவ்வளவு ?

நான் : 31.

ஜனாபாய்  டீச்சர் : இந்த மதிப்பெண்கள் போதுமா..?

நான் : [மௌனம்]

ஜனாபாய்  டீச்சர் : விடைத்தாளின் கடைசிப் பக்கத்தை திருப்பு..

நான் : [திருப்புகிறேன்]

ஜனாபாய்  டீச்சர் : அங்க எழுதியிருக்கிற கேள்விய சத்தமா படி.

[அங்கு ஒரே ஒரு கேள்வியும் அதற்க்கான பதிலும் எழுதப்பட்டிருந்தது]

நான் : யாதேனும் நான்கு சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை கூறு.

ஜனாபாய்  டீச்சர் : இப்ப பதிலை படி.

நான் : வீர பாண்டிய கட்டபொம்மன், ...[மௌனம்]..

ஜனாபாய்  டீச்சர் : ம்ம்.. படி 

நான் : வீர பாண்டிய கட்டபொம்மன், எம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் பலர் சுதந்திர போராட்ட வீரர்களாக இருந்தனர்.

அவ்வளவுதான் வகுப்பு முழுதும் ஒரே சிரிப்பலைகள்... கேள்வித்தாளில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் இரண்டு முறை பதில் எழுத சொல்லிவிட்டு என்னை அமரச் சொன்னார் மேலே உள்ள 31 மதிப்பெண் என்பது மொத்த மதிப்பெண்கள் 90 க்கு. 100க்கு 35 எடுத்தால் தேர்ச்சி. நான் மொத்தமாகவே 5 பக்கங்களுக்கு மட்டுமே எழுதியிருந்தேன் மேலும் தேர்ச்சி பெற்றுவிட்டேன் ஜனாபாய் ஆசிரியர் உதவியுடன்.

சம்பவம் 2:
                    எங்க வீட்டுல தொலைக்காட்சிப் பெட்டி வாங்குனாங்க. வண்ணத் தொலைகாட்சிப் பெட்டி விலை அதிகம் என்பதால் கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினார்கள். அது என்னவோ தெரியல எங்க வீட்டுக்கு தொலைக்காட்ச்சிப்பெட்டி வந்ததுக்கு அப்றம்தான் நான் நல்ல படிக்க ஆரம்பிச்சன். இந்த தொலைக்காட்சிப்பெட்டி உபகரணங்கள் வாங்கி கோர்க்கப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டி.

சம்பவம் 3:
                   ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து விடைத்தாள்கள் வழங்கப்பட்ட பின்னர் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடைபெறும். இங்கு தர அட்டையில் (Rank Card) முதல் பருவத்தேர்வு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் நாங்கள் பெற்ற மதிப்பெண்களும்(பாட வாரியாக), வகுப்பில் ஒவ்வொரு தேர்வுக்குமான எங்களது தரமும்(Rank) இருக்கும். 
                  வீட்டில் பையன் ஒழுங்கா படிக்கிறானா என ஆசிரியரும், பள்ளியில் புள்ள ஒழுக்கமா நடந்துக்குறானா என பெற்றோரும் மாறி மாறி கேட்டுக்குவாங்க.
                  இது வரை இல்லாத ஒரு அதிசயம் அரையாண்டுத் தேர்வில் நடந்தது. நான் 500 க்கு 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று வகுப்பின் தர வரிசைப் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் வந்தேன். ஆம் ஆச்சரியமான நிகழ்வு. வகுப்பின் தர வரிசைப் பட்டியலில் எனக்கு 6வது இடம்.
                  மேலும் கணிதத்தில் நான் இதுவரைப் பெற்றிடாத அதிகப்படியான மதிப்பெண் 76. இந்த மதிப்பெண்தான் என்னையும் படிக்கற பசங்க வளையத்திற்குள் கொண்டு வந்தது. அன்று முதல் என் முதுநிலை படிப்பு முடியும் வரை என்னையும் படிக்குற பசங்க வளையத்துக்குள்ளேயே வச்சிருந்தது இந்த கணிதம்.

சம்பவம் 4:
                  எட்டாம் வகுப்ப பத்தி சொல்லும்போது கண்டிப்பா நான் என் வகுப்புல இருந்த ஒரு மாணவனைப் பற்றி சொல்லியே ஆகா வேண்டும். அவனோட பெயர் வீரமணி [He was a great Entertainer]. எங்களுக்கு ஓய்வு வகுப்புகள்[Free Period] வரும்போது அவனை நச்சரித்து கதை சொல்ல சொல்லுவோம். அவன் கதை சொல்ல ஆரம்பிச்சா அவ்வளவு விருவிருப்பா போகும். அவன் சொல்ற கதைய கேக்கறதுக்கு ஒரு பெரிய கூட்டமே அவன சுத்தி இருக்கும். கதையுடன் கூடவே எண் ஒலி முறையுடன்[Digital Sound System] கூடிய பின்னணி இசையும் வாய் வழியாக குடுப்பான். அவன் கதை சொல்ல ஆரம்பிச்சா அந்த பாடவேளை நேரம் முடியறதே தெரியாது.
                 ஓய்வு வகுப்பு நேரங்களில் இவனையல்லாத இன்னும் சில பொழுதுபோக்கும் எங்களுக்கு உண்டு. அது புத்தக மட்டைப் பந்தாட்டம்[Book Cricket] மற்றும் காகித திருடன் 'போலீஸ்' ஆட்டம், Etc..

சம்பவம் 5:
                 எங்கள் பள்ளியில் இரண்டு பாடவேளைகளுக்கு ஒருமுறை 10 நிமிடம் இடைவேளை விடுவார்கள். ஒரு நாள், இரண்டாவது பாடவேளை, சமூக அறிவியல் பாடம் ஜனாபாய் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். நான் ஏற்கனே சொன்னது போல ஜனாபாய் ஆசிரியர் பாடவேளை தூக்கம் தள்ளாடியது. கண்கள் சொருகுகிறது. 45 நிமிடங்கள் தாக்கு பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. வகுப்பு முடிந்ததும் ஆசிரியர் சென்று விட்டார், நான் எனது சாப்பாட்டு கூடையை கையில் எடுத்துக்கொண்டு வழக்கமாக சாப்பிடும் இடத்திற்க்கு நகர ஆரம்பித்துவிட்டேன். சற்று தூக்கம் தெளிந்தவனாய், சுற்றும் முற்றும் பார்க்கும்போது எவர் கையிலும் சாப்பாட்டுக் கூடை இல்லை என் ஒருவனைத் தவிர. ஒரு நொடி சுதாரித்து எனக்கு நானே விமர்சனம் செய்துகொண்டு சாப்பாட்டு கூடையை வைத்துவிட்டு தண்ணீர் குழாயை தேடி முகம் கழுவிவிட்டு அடுத்த பாடவேளைக்கு ஆயத்தமானேன். கொஞ்சம் யோசிச்சு பாருங்க எந்த அளவுக்கு எனக்கு தூக்கம் வந்திருக்கும்னு..!! :-)



திங்கள், 26 நவம்பர், 2012

பதிவர்களை மிரட்டுகிறேன்..!!!???

அனைவருக்கும் வணக்கம்.

என் பதிவுகளை படிக்க வரும் படிப்பாளிகளுக்கும், பதிவர்களுக்கும் ஒரு மிரட்டல் வேண்டுகோள்.

இதுவரைக்கும் மொத்தமா 20 பதிவுகளை நான் இங்க பகிர்ந்திருக்கிறேன்.
இது 21வது பதிவு. ஒவ்வொரு பதிவுக்கும் சராசரி பார்வையாளர்களின் எண்ணிக்கை 300.

பத்து பேருக்கு ஒருவர் வீதம்-னு பாத்தாலும் ஒவ்வொரு பதிவுக்கும் 30 பின்னூட்டமாவது வந்திருக்கணும். ஆனால் என்னுடைய பதிலுரையையும் சேர்த்தும் கூட 10 பின்னூட்டங்களை கூட தாண்டவில்லை.

அதன் பொருட்டே இந்த பதிவு.


இங்கு பதிவுகளை படித்துவிட்டு கருத்து இடாமல் செல்வோருக்கு தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு எற்படுமாறு கொஞ்சிக்குப்பம் ஐய்யனார் கோவிலில் சீட்டு எழுதி கட்டி, சேத்தியாதோப்பு மந்திரவாதியின் மூலம் வைப்பு சூனியம் வைக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். 


---------------------
கொஞ்சிக்குப்பம் ஐய்யனார் கோவில் :

இந்த கோவில் பண்ருட்டி- வடலூருக்கு இடையிலான சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது மக்கள் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி என பல தொலைக்காட்சிகளில் இடம்பெற்ற புகழ்மிக்க கோவில் ஆகும்.

இக்கோயில் புகழ் பெற காரணம். "குடியை தடுக்கும் கொஞ்சிக்குப்பம் ஐய்யனார்" எனும் கூற்றே ஆகும்.

ஆம், ஒருவர் ஒருமுறை இனி நான் குடிக்கவே மாட்டேன் என இக்கோயிலில் சத்தியம் செய்து சீட்டு எழுதி கட்டிவிட்டு வந்துவிட்டால், அவருக்கு குடிக்கும் எண்ணமே வராதாம். ஒருவேளை அவர் தனது சத்தியத்தை மீறி குடித்துவிட்டால், அவருடைய கை கால்களை இழுத்துவிடுமாம் [அதாவது பக்கவாதம் வந்தவரை போல் ஆகிவிடுவாராம்]. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த கடவுள் கொஞ்சிக்குப்பம் ஐய்யனார்.

எங்க சுற்று வட்டாரத்துல, பக்கத்து வீட்டுக்காரன் கூட சண்டை, இல்லனா எவனாவது எதையாவது திருடிட்டான் அப்டினா, கொஞ்சிக்குப்பம் ஐய்யனார் கோவிலுக்கு போயிட்டு சீட்டு எழுதி கட்டிட்டு வந்துடுவாங்க. ஐய்யனார் சம்பந்தப்பட்டவங்கள ஏதாவது ஒரு வழியில தண்டிச்சுடுவார்.

அவ்வளவு சீக்கிரத்துல யாரும் போய் சீட்டு எழுதி கட்ட மாட்டாங்க. ஏன்னா, சீட்டு எழுதி கட்டிட்டா கண்டிப்பா சம்பந்தப்பட்டவங்களுக்கு கேட்டது நடக்கும் என்பது நம்பிக்கை. எப்பொழுது அளவு கடந்த ஆத்திரமும் கோவமும் வருகிறதோ, அப்போதுதான் இந்த சீட்டு எழுதி கட்ற முடிவுக்கே வருவாங்க.

சேத்தியாத்தோப்பு மந்திரவாதி :

இவரப் பத்தின தகவல்கள் எதுவும் இங்க குடுக்கப்பட முடியாது.

-------------------

அட, என்ன எழுதறதுன்னு தெரியலையா..!? ஒரு சிரிப்பு பூச்சி[:-)] இடுங்க. பதிவு ரொம்ப கொடுமையா இருக்கா..!!? ஒரு அழற பூச்சி[:-(] இடுங்க.
ஏதாவது ஒரு வகையில உங்களோட வருகையை பதிவு செய்யணுமா இல்லையா..!!?
எல்லோரும் மனசுல ஒரு விசயத்தை நல்லா ஏத்திக்கோங்க, கொஞ்சிக்குப்பம் ஐய்யனார் கோயில் மற்றும் சேத்தியாத்தோப்பு மந்திரவாதி.

சரி.. இந்த ஆத்திகவாதிகளும், வாயளவுல நாத்திகம் பேசறவங்களும் இனிமே அவங்களோட வருகையை பதிவு செய்வாங்கன்னு நம்பலாம்.

ஆனால், உண்மையாவே நாத்திகனா இருக்கறவங்களுக்குதான் என்ன செய்றதுன்னு தெரியல. எப்படியோ, எதுவா இருந்தாலும் நாத்திகர்கள் கொஞ்சம் நல்லா யோசிச்சு உங்க வருகையை இங்க பதிவு செய்யுங்க..

நான் மறுபடியும் சொல்றன்


இங்கு பதிவுகளை படித்துவிட்டு கருத்து இடாமல் செல்வோருக்கு தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு எற்படுமாறு கொஞ்சிக்குப்பம் ஐய்யனார் கோவிலில் சீட்டு எழுதி கட்டி, சேத்தியாதோப்பு மந்திரவாதியின் மூலம் வைப்பு சூனியம் வைக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். 


பின்னூட்ட பெட்டிக்கு மேலேயும் இந்த பத்தியை இணைத்துள்ளேன்.

குறிப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் கொஞ்சிக்குப்பம் ஐய்யனார் கோயில் இல்லை. வார்த்தைகள் கடுமையாக தெரியும் பட்சத்தில் மன்னிக்க வேண்டுகிறேன்


நன்றி : கூகிள் [படம்]