வியாழன், 27 ஜூன், 2013

தலைவலி : ஸ்ஸ்ஸஸப்ப்பா.... மிடியல...


நமக்கு எப்பவும் பெரிய தொந்தரவா இருப்பவைகளில் மிக முக்கியமானது இந்த தலைவலி.. ஒரு சிலருக்கு அடிக்கடி வரும் ஒரு சிலருக்கு எப்பவாவது வரும். நான் இணையத்துல, முகநூல்ல-னு பாக்கும்போதெல்லாம் எழுதிவச்ச தீர்வுகளை இங்க கொடுத்திருக்கேன். படித்து தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள்..

ஒரு தலைவலிக்கு எத்தனை தீர்வுகள்...!!!?? முழுவதும் படிச்சுபாத்து உங்களுக்கு அந்த தீர்வு சரியா இருக்கும்னு தெரிஞ்சிக்கோங்க..
       
  M  மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி ,தலை பாரம் குணமாகும் .

  M  மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலை வலி குணமாகும் .

  M  மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.

  M  தேன் தவிர எலுமிச்சை, புதினா, போன்ற பொருட்களும் தலைவலிக்கு நிவாரணம் தரும் மருந்தாக செயல்படுகின்றன.

  M  எலுமிச்சையும், தேனும் கலந்து தண்ணீர் சேர்த்து ஜூஸ் சாப்பிடுவது தலைவலிக்கு சிறந்த மருந்தாக அமையும்.

  M  எலுமிச்சையை பிழிந்து தலையில் பற்று போட்டால் தலைவலி சிறிதுநேரத்தில் குணமடையும்.

  M  புதினா சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது. புதினா இலையை டீ போட்டு குடித்தால் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

  M  நொச்சி இலையைக் கசக்கித் தலையை வைத்துக் கட்டினால் தலைபாரம், கழுத்து நரம்புக் கசிவு போகும்.

  M  தலைவலி இருப்பவர்கள் சூடான 1 கப் காபியில் அரை எலுமிச்சைப் பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது.

  M  தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.

  M  ஜலதோஷம்: ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

  M  தலைவலி, மூக்கடைப்பு நீங்க: நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணையை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.

  M தலைப்பாரம் குறைய: நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

  M ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கெண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.

  M தலைபாரம், நீரேற்றம் நீங்க: இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.

  M கடுமையான தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

            குறிப்பு : இத்தீர்வுகள் அனைத்தும் நான் இணையத்தில் படித்தவை.. இன்னும் எந்த தீர்வையும் முயற்ச்சி செய்யவில்லை.
.