வெள்ளி, 12 ஜூலை, 2013

சூழ்ச்சியில் பா.ம.க – பாகம் 2


தருமபுரி கலவரத்தில் பா.ம.க-வை உள்ளிழுத்து அதன் நற்ப்பெயரை கெடுத்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டது திராவிட சூழ்ச்சி. தருமபுரி கலவரம் நடந்தது நவம்பர் 2012. அடுத்த சில நாட்களில் கடலூர் மாவட்டம் பாச்சாரபாளையம் கிராமத்தில் ஒரு கலவரம். இதற்கும் பா.ம.க தான் காரணம், இது வன்னிய சாதி வெறி என புனையப்பட்டது. இது பற்றிய எனது பதிவு இதோ : பாச்சாரபாளையம் : வன்னிய சாதி வெறி..!!??

இச்சம்பவங்களை தொடர்ந்து பா.ம.க ஏற்கனவே அறிவித்தபடி மதுக்கடைகளுக்கு பூட்டுபோடும் போராட்டத்தை நடத்தியது. இப்போராட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதில் ஊடகங்களாலும், திராவிடத்தாலும் பெரிதாக எந்த திரிபுவேலையும் செய்ய முடியவில்லை.

தருமபுரி கலவரமும் மக்கள் மத்தியில் கிட்டதட்ட மறைந்துவிட்டது. ஆனாலும் சிலர் மட்டும் பா.ம.க-வை சம்பந்தப்படுத்தி தொடர்ச்சியாக கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர். இதற்கு தக்க பதிலடிகளை ஓரளவுக்கு இணையத்திலிருக்கும் பா.ம.க வினர் செய்துவந்தனர்.

இந்நிலையில் பா.ம.க சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றிற்க்கு பாட்டாளி மக்கள் கட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அது மக்கள் நலன் பயக்கும் அதிரடி தீர்ப்பாகவும் இருந்தது. அத்தீர்ப்பின் படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504 மதுக்கடைகளும், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500க்கும் மேற்ப்பட்ட மதுக்கடைகளும் மார்ச் 31, 2013க்குள் தமிழக அரசு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இச்செயலால் மனக்கசப்பு இருந்தாலும் பா.ம.க வை பராட்ட வேண்டிய கட்டாயத்திற்க்கு தள்ளப்பட்டனர் பலர். மக்கள் மத்தியில் பா.ம.க-விற்கு செல்வாக்கு உயர்ந்தது.

மதுக்கடைகளுக்கு பூட்டு போட்ட போராட்டத்தாலும், மதுக்கடைகளுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பாலும் மக்கள் மத்தியில் நல்ல வளர்ச்சியை பெற்றது பா.ம.க. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ததால் அ.தி.மு.க மீது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்ப்பட்டதை மறுக்க முடியாது.

பா.ம.க-வின் அடுத்தடுத்த மக்கள் நல செயல்களால் அதன் மீது பூசப்பட்ட கரைகள் ஓரளவுக்கு துடைக்கப்பட்டிருந்தது. பா.ம.க வின் இத்தகைய மக்கள் நல செயல்களால் அ.தி.மு.க-விற்க்கு நிச்சயம் எரிச்சல் ஏற்பட்டிருக்கும். ஏனென்றால் இச்செயல்களால் அதிகம் பாதிக்கப்பட்டது அ.தி.மு.க.

அதுமட்டுமில்லாது, முக்குலத்தோர் மற்றும் கொங்கு கவுண்டர்களுக்கான சாதிய அமைப்புகள் மருத்துவர் இராமதாசுக்கு ஆதரவு தெரிவிப்பதால் [அனைத்து சமுதாய பேரியக்கம்], இம்மக்களிடையே அதிக செல்வாக்கு பெற்றிருந்த அ.தி.மு.க விற்க்கு பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகம்.

இதனை தொடர்ந்து மரக்காணம் கலவரம்: வன்னியர் சங்க மாநாட்டிற்க்கு வந்தவர்கள் மரக்காணம் என்ற இடத்தில் ஏற்பட்ட கலவரத்தில் இருவர் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் ஊமையாய் இருந்த பல பா.ம.க ஆதரவு இளைஞர்களை பேச வைத்தது. இச்சம்பவம் நடுநிலை வியாதி பிடித்தவர்களை அடையாளம் காட்டியது. குறிப்பாக அரசியல் கட்சியினர் யாரும் இறந்தவர்களுக்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது .

இக்கலவரம் திராவிட கட்சிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். இங்கு செயல்படும் சூழ்ச்சி ஆரிய திராவிட சூழ்ச்சி [அ.தி.மு.க].

வன்னியர் சங்க மாநாட்டின் ஒரு வாரத்திற்க்கு முன்பாக காவல் நிலையத்தில் பா.ம.க வினால் ஒரு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அதாவது, மரக்காணம் பகுதியானது ஏற்கனவே கலவரம் நடந்த பகுதி. ஆகவே, மாநாட்டுக்கு வருபவர்கள் பாதுகாப்புடன் வந்து செல்ல மரக்காணம் பகுதியில் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இது பா.ம.க வினரால் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்ட நடவடிக்கை.

அதே சமயம் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் தலைவர் பொங்கலூர் இரா மணிகண்டன் அவர்கள் தனது முகநூலில் ஒரு தகவலை வெளியிட்டார். அதாவது, சித்திரை முழுநிலவு பெருவிழாவிற்கு செல்லும் வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க வினர் எச்சரிக்கையாக இருக்கவும். கலவரம் செய்ய சிலர் திட்டமிட்டிருப்பதாக நம்பிக்கைக்குறிய தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.

அண்ணன் மணிகண்டன் அவர்கள் தெரிவித்ததைப்போலவே கலவரமும் நடக்கிறது. இருவர் கொல்லப்படுகின்றனர். இங்கு திராவிட சூழ்ச்சி வெகு சுறுசுறுப்பாக செயல்படுகிறது. வழக்கம்போல கலவரத்திற்க்கு காரணம் பா.ம.க வினர் என பரப்பப்படும் செய்தி.

இங்குதான் இது திராவிட சூழ்ச்சியாக இருக்கும் என எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் மரக்காணம் பகுதியில் காவலுக்கு நிறுத்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை இரண்டு. அவ்விடத்தில் ஒரு 10 காவலர்களை நிறுத்தியிருந்தால், அப்படி ஒரு கலவரம் நடப்பதற்க்கான வாய்ப்பே இருந்திருக்காது. ஆனால், நிறுத்தப்படவில்லை.. ஏன்? அதுதான் திராவிட சூழ்ச்சி.

எது எப்படியோ.. மரக்காணத்தில் பாதுகாப்பு வேண்டும் என கேட்ட பா.ம.க தான் கலவரத்திற்க்கு காரணம் என திராவிட, பார்ப்பன ஊடகங்கள் மீண்டும் களம் இறங்கியது ஆரிய திராவிட சூழ்ச்சியோடு. மீண்டும் சாதி வெறி கரை பா.ம.க மீது தெளிக்கப்பகிறது. மீண்டும் பா.ம.க செய்த, செய்துவரும் நற்செயல்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு சேர் வாரி பூசப்படுகிறது.

இச்சம்பவத்தில் இறந்தவர்கள் குறித்து நடுநிலை வியாதி பிடித்தவர்களின் கருத்து “அவர்கள் சாதி வெறியர்கள் தானே அதனால சாகலாம் தப்பில்லை” என்பதாக இருக்கிறது. இந்நடுநிலையாளர்கள் பற்றிய எனது பதிவு இதோ : மரக்காணம் கலவரம் : நீங்களா நடுநிலைவாதிகள்..!! இல்லை, நடுநிலைவியாதிகள்..

இச்சம்பவம் குறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, இறந்தவர்களை விபத்தில் இறந்ததாக அறிவிக்கிறார். அடுத்த இரண்டாவது நாள் இது கொலைதான் என்கிறது உடற்க்கூறு ஆய்வறிக்கை தகவல். தவறான ஒரு தகவலை சட்டசபையில் பதிவு செய்த முதல்வர் ஜெயலலிதா உண்மையை அறிந்தபின் சட்டசபையில் அதை மீள் பதிவு செய்யவில்லை.

முதல்வரின் இச்செயல்தால் இச்சம்பவம் திராவிட சூழ்ச்சிதான் என்பதை எனக்கு உறுதி செய்தது.

இதைத் தொடர்ந்து மருத்துவர் இராமதாசு மரக்காணம் கலவரத்திற்கு நீதிவிசாரணை வேண்டி விழுப்புரத்தில் அமைதி வழி போராட்டம் ஒன்றினை நடத்த திட்டமிடுகிறார். அதற்காக காவல்துறையிடம் அனுமதி கோரப்படுகிறது. இதற்கு வேறு தேதியில் அனுமதி அளித்த காவல்துறை பின்பு போராட்டம் நடைபெறுவதற்க்கு முதல் நாள் அவ்வனுமதியை இரத்து செய்கிறது.

இருப்பினும், தடையை மீறி போராட்டம் நடத்தப்படுகிறது. இது வழமையாக எல்லா அரசியல் கட்சிகளும் செய்யும் ஒரு நிகழ்வு. மருத்துவர் கைது செய்யப்படுகிறார்.
[இப்போராட்டம் நடந்தது, மருத்துவர் கைது செய்யப்பட்டது ஏப்ரல் 30, 2013. மருத்துவர் கைது செய்யப்படுவதற்க்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது ஏப்ரல் 28, 2013. அன்று மருத்துவர் இராமதாசு அத்திக்கடவு-அவினாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை நிறைவேற்றக்கோரி போராட்டம்(வாகன பேரணி) தொடங்கி வைக்க கோவைக்கு வருகிறார். நாம் அனைவரும் அறிந்த ஒரு சேதி, கோவை மண்டலம் தி.மு.க வை விட அ.தி.மு.க விற்க்கு அதிக செல்வாக்கு நிறைந்த பகுதி. எந்த கட்சியும் தனக்கு செல்வாக்கான பகுதிகளில் தனது கட்சிக்கு பாதிப்பு ஏற்படுவதை விரும்பாது. மருத்துவரின் இதுபோன்ற செயல்கள் அப்பகுதிகளில் பலத்த வரவேற்ப்பை பெறுகிறது]

பொதுவாக இம்மாதிரி தடையை மீறி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்து மாலையில் விடுவிப்பதுதான் வழக்கம். இங்குதான் திராவிடத்தின் அடுத்த சூழ்ச்சி களம் இறங்குகிறது.

மருத்துவர் இராமதாசு கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்படுகிறார். மருத்துவர் இராமதாசு மாதிரியான தலைவர்கள் கைது செய்யப்படும்போது அவர்களுக்கு செல்வாக்கு மிகுந்த பகுதிகளில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்பது அரசியலின் அரிச்சுவட்டை அறிந்த அனைவருக்கும் தெரியும்.

மருத்துவரை கைது செய்து சிறைலடைக்க முடிவெடுத்த பின்பு வட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவிக்கை அனுப்பி பதட்டம் ஏற்பட கூடிய பகுதிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க ஏற்ப்பாடு செய்திருக்க வேண்டும் அல்லவா..!!? ஆனால், எனக்கு தெரிந்த வரைக்கு அப்படி எந்த பாதுகாப்பும் அளிக்கபடவில்லை. ஏன்..!!??

அதுதான் சூழ்ச்சி. இராமதாசு கைது செய்யப்படுவதால் கலவரம் ஏற்படும். கலவரத்தில் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும், பொது மக்களுக்கு இன்னல் விளையும் அதனால் பா.ம.க-வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்.

அப்படிதான் நடந்தது. சூழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது. கிட்டதட்ட 500க்கும் மேற்ப்பட்ட பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாகவும், 10 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எரிக்கப்பட்டதாகவும், 6 அரசு மதுபான கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் சேதாரங்கள் கணக்கு காட்டப்பட்டன ஊடகங்களில். ஆனால், மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட வேண்டிய காரணம் என்ன என்பதை கேட்க மறுத்தன இவ்வீணாப்போன ஊடகங்கள். வழக்குகள் சுழற்சி முறையில் தொடுக்கப்பட்டன. பரிதாபத்துக்குறிய நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி.

வன்முறையாளர்கள் பா.ம.க வினர் என கூப்பாடு போட்டனர் இணைய போராளிகள். அரசு தரப்பில் இருக்கும் அத்தனை தவறுகளையும் மறைத்து குற்றம் சுமத்தினர் பாட்டாளி மக்கள் கட்சியினரை.

சூது கவ்வியது.. சூழ்ச்சி வென்றது.. சூழ்ச்சிகளின் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் விரைவில்...

குறிப்பு : பதிவுக்கு சம்பந்தம் இல்லாத எந்த கேள்வியையும் தயவு செஞ்சு கேக்காதீங்க. என்னுடைய பதிவுகளில் குற்றமிருப்பின் தாராளமாக விவாதிக்கலாம்.

சூழ்ச்சியில் பா.ம.க – பாகம் 3

புதன், 10 ஜூலை, 2013

சூழ்ச்சியில் பா.ம.க – பாகம் 1


எப்பொழுது பா.ம.க தனித்து தேர்தலை சந்திக்க போவதாக அறிவித்ததோ அப்பொழுதே ஆரம்பித்துவிட்டது பா.ம.க விற்க்கு எதிரான அரசியல் வலைப்பின்னல். பா.ம.க வின் இந்த அறிவிப்பால் மிகப்பெரிய பாதிப்பை அடையபோவது இந்த திராவிட கட்சிகள்தான். குறிப்பாக அ.தி.மு.க-வை விட தி.மு.க-விற்குதான் அதிகப்படியான பாதிப்பு.

எப்படி..!!?

வட மாவட்டங்களில் தி.மு.க-வின் வாக்கு சதவிகிதம் அ.தி.மு.க-வை விட அதிகம். அதனால் பா.ம.க தனித்து போட்டியிட்டால் தி.மு.க-விற்கு பெருத்த சேதாரம் ஏற்படும். அதே சமயம் அ.தி.மு.க-விற்கும் பாதிப்பு இல்லாமல் இல்லை. நிச்சயம் அ.தி.மு.க-வையும் பாதிக்கும்.

ஏற்கனவே தே.மு.தி.க-வை கையாலாகாத கட்சியாக மாற்றியாகிவிட்டது. இந்நிலையில், பா.ம.க தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால் அ.தி.மு.க-வை பாதித்த தே.மு.தி.க-வில் இணைந்த வாக்குகள் தே.மு.தி.க-விலிருந்து பா.ம.க-விற்க்கு மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மேலும், இளைஞர்களை அதிகம் கொண்ட கட்சியாக இருப்பதுவும், இளைஞர்களை அதிகமாக அரசியலில் ஈடுபடுத்துவதுமான கட்சியாக இருப்பதுவும் பா.ம.க மட்டுமே. அதற்க்கு காரணம் இன்றைய அரசியல் கட்சிகளில் இளம் தலைவர்களை அதிகம் கொண்ட கட்சியாக பா.ம.க மட்டும்தான் இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல், இன்றைய இளைஞர்கள் தமிழ், தமிழர் சார்ந்த நிகழ்வுகளில் அதிக ஈடுபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். இங்கு ஒரு தமிழனை முதல்வர் வேட்பாளராக நிறுத்தும் ஒரே கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே இருக்கிறது. ஏனைய கட்சிகள் மறந்தும்கூட ஒரு தமிழனை முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தமாட்டார்கள். ஆதலால், பா.ம.க-விற்கு வாக்குகள் வெகுவாக அதிகரிக்கும்.

மேலும், அக்காலத்தில் பேசியதைப்போல தமிழில் நயமாக பேசியோ, திரைப்பட கவர்ச்சியாலேயோ இக்கால இளைஞர்களை கவர முடியாது. ஏனென்றால், இக்கால இளைஞர்களுக்கு சரியாக தமிழும் தெரியாது, இவர்களின் நயமான பேச்சும் புரியாது. கூடவே அதிகமான வெளிநாட்டு திரைப்படங்களையும் பார்க்கின்றனர். அதனால, சினிமா கவர்ச்சியும் எடுபடாது.

கூடங்குளம் அணு உலையை அம்மக்களுக்கு ஆதரவாக முழுமையாக எதிர்த்தது பாட்டாளி மக்கள் கட்சி. இத்திராவிட கட்சிகளோ மக்களை முட்டாளாக்க நினைத்து தோல்வியை சந்தித்தது.

அதேசமயம் ஈழ உறவுகள் பிரச்சனையில் இத்திராவிட கட்சிகளின் கள்ளத்தனம் தெளிவாக மக்களுக்கு புரிய ஆரம்பித்தது. இங்கு பா.ம.க வின் செயல்பாடுகள் அதிக வரவேற்ப்பை பெற்றன. தி.மு.க டெசோ நாடகத்தால் மக்கள் எரிச்சலடையும் சமயத்தில் மருத்துவர் இராமதாசால் நிறுவப்பட்ட “பசுமை தாயகம்” அமைப்பின் மூலமாக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான அழுத்தத்தை கொடுத்து வந்தது பா.ம.க. இத்தகைய செய்திகள் ஊடகங்களில் பெரிதாக ஒளிபரப்ப்படாவிட்டாலும், உண்மை அறிந்த இளைஞர்களால் சமூக ஊடகங்கள் வழியாக செய்திகள் பரப்பப்பட்டது. இது பா.ம.க மீதான நன்மதிப்பை மேலும் உயர்த்தியது.

இப்படியாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு செல்வாக்கு அதிகமாகும் வாய்ப்பு மிக மிக அதிகமாக இருக்கிறது.

இங்குதான் திராவிட கட்சிகளின் குள்ள நரித்தனம் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது. ஒரு வழியாக தே.மு.தி.க மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து ஒழிந்தாகிவிட்டது. இனி பா.ம.க மட்டும்தான். பா.ம.க வை எப்படி ஒழிப்பது..!!?

திராவிட சூழ்ச்சிக்கு வேலை வந்தது. வேறு வழியெ இல்லை. பா.ம.க-வின் மீதான நற்பெயரை கெடுத்தே ஆக வேண்டும். அது மட்டுமே ஒரே வழி என சூழ்ச்சியை விரித்தன இந்த திராவிட கட்சிகள். பா.ம.க மீதான சாதி வெறி கரையை தூசுதட்டியது.
இவர்களின் சூழ்ச்சிக்கு நல்வாய்ப்பாக அமைந்தது தருமபுரி கலவரம்.

ஒரு பரையர் சாதியை சார்ந்த இளைஞன் வன்னியர் சாதியை சார்ந்த பெண்ணை காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கிறான். அப்பெண்ணின் தந்தை அவ்விளைஞனிடமிருந்து தன் பெண்ணை பிரித்து தன்னுடன் அழைத்துவர முனைகிறார். அதில் தோல்வியடைந்து தற்க்கொலை செய்துகொள்வதென முடிவெடுத்து உயிரை மாய்த்துகொள்கிறார். இதன் தொடர்ச்சியாக இறந்தவரின் உறவினர்களும், மற்றும் பிற சாதியினரும் சேர்ந்து கலவரம் செய்கின்றனர் மூன்று தலித் கிராமங்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன.

இறந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு கிராமத்தை அடைகிறது. அடக்கம் செய்ய யாரும் இல்லை அனைவரும் சிறைச்சாலைகளில் கைதிகளாக. இறந்தவர் தே.மு.தி.க கட்சியை சார்ந்தவர். அக்கட்சியை சார்ந்தவர்கள் ஒருவரும் அப்பக்கம் எட்டிகூட பார்க்கவில்லை.[தே.மு.தி.க நண்பர்களே, உங்கள் கட்சி பிரமுகர் செய்தது சரியோ, தவறோ அவரது உயிரிழப்புக்கு ஆறுதலாக பேச கூட உங்கள் கட்சி இல்லை. நாளைக்கு உங்களுக்கும் இதே நிலைமைதான்.]

இங்குதான் பா.ம.க உள்வருகிறது இறந்தவருக்கு இறுதி சடங்கு செய்வதற்காக. ஏன் பா.ம.க வரனும்..!!? தக்காளி, நீங்க யாரும் வர மாட்டீங்க பா.ம.க-வும் வரகூடாதுனா என்னயா உங்க ஞாயம்..!!?. ஒரு வன்னியன் பாதிக்கப்பட்டால் நீங்க யாரும் கேக்க மாட்டீங்க, ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி நிச்சயம் உறுதுணையாக நிற்க்கும்.

இங்குதான் இத்திராவிட நரிகளின்[தி.மு.க] சூழ்ச்சி களமிறங்குகிறது. ஏன்..!!?

[இக்கலவரம் நடந்த அந்த சமயத்தில் அனைவரது பார்வையும் ஐ.நா சபை கூட்டம் மற்றும் இலண்டன் உலக தமிழர் மாநாட்டின் மீதுதான் இருந்தது. இங்கு பா.ம.க வின் பங்களிப்பு குறிப்பிடதக்கது. பா.ம.க வின் பங்களிப்பு இணையத்தின் வழியாக பரவி பா.ம.க அனைத்து தரப்பினராலும் பாராட்டு பெறுகிறது. பா.ம.க வின் இச்செயலால் தி.மு.க வின் டெசோ நாடகம் பெருத்த அடியை சந்திக்கிறது.]

இந்த சமயத்தில், இவ்வாய்ப்பை பயன்படுத்திய தி.மு.க உண்மை அறியும் குழு என்ற ஒரு குழுவை தருமபுரி கலவர பகுதிக்கு அனுப்புகிறது. அக்குழு ஏற்கனவே முடிவு செய்த தகவலைதான் வெளியிடப்போகிறது. இருப்பினும் வெளி உலகிற்க்கு தாங்கள் கலவர பகுதியை பார்வையிட்டு விசாரணை செய்ததாக காண்பிக்க குடிசைகள் எரிக்கப்பட்ட பகுதியை பார்வையிடுகிறது. சிலரிடம் விசாரணையை மேற்க்கொள்கிறது. ஒரு பக்க விசாரணை முடிகிறது. இப்போது அடுத்த பக்கத்தை விசாரிக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் தவிர்க்கிறது அக்குழு. அத்துடன் தங்களது விசாரணையை முடித்துக்கொண்டு அறிக்கையை வெளியிடுகிறது. பா.ம.க தான் முழுக்க முழுக்க இக்கலவரத்திற்க்கு காரணம் என்று. இத்தனைக்கும் கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் அ.தி.மு.க-வினர் 16 பேர், தி.மு.க-வினர் 14 பேர், ம.தி.மு.க-வினர் 8 பேர், பா.ம.க-வினர் 10 பேர் மற்றும் தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சியினர் என அனைத்து கட்சியினரும் உள்ளடக்கம். ஆனாலும் பா.ம.க வினர்தான் கலவரத்திற்க்கு காரணம் என அக்குழு அறிவிக்கிறது.

திராவிட மற்றும் பார்ப்பன ஊடகங்களால் இச்செய்தி பிரதான செய்தியாக பரப்பப்படுகிறது. அனைவரது மத்தியிலும் பா.ம.க சாதி வெறி கட்சியாக திணிக்கப்படுகிறது. பா.ம.க வின் அனைத்து நற்ச்செயல்களும் இங்கு மறைக்கப்படுகிறது. மேலும் இக்கலவரத்தில் கைது செய்யப்பட்ட பிற கட்சியினரைப் பற்றிய தகவல்களை மூடி மறைக்கின்றன இந்த வீணாபோன ஊடகங்கள்.

இதன் அடுத்தகட்டமாக, கொங்கு கவுண்டர்கள், தேவர்கள், நாயுடுகள், மற்றும் பல சாதிய அமைப்புகள் இணைந்து மருத்துவர் இராமதாசிடம் ஒரு கோரிக்கையை வைக்கின்றன. அக்கோரிக்கையை ஏற்று “அனைத்து சமுதாய பேரியக்கம்” என்ற ஒரு அமைப்பை தொடங்குகிறார் மருத்துவர் இராமதாசு.

அதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கூட்டம் போட்டு சில தீர்மானங்களை நிறைவேற்றுகின்றனர். அத்தீர்மானங்களில் மிக முக்கியமானது வங்கொடுமை தடுப்பு [PCR ACT] சட்டத்தில் திருத்தம் கொண்டுவருதல். பிற சாதியினர் அனைவரும் PCR சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என முழங்கியபோது திருத்தம் மட்டும் போதும் என கேட்டவர் மருத்துவர் இராமதாசு மட்டும்தான். இங்கு ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என பாடுபட்டவரே அச்சட்டத்தில் திருத்தம் வேண்டும் என போராடுவதுதான் வருத்தத்துக்குறிய சேதி. அவரை அந்நிலைக்கு தள்ளியது சில தலித் அமைப்புகள்தான். உதாரணமாக வழக்குறைஞர் இரஜினிகாந்த் மேட்டுப்பாளையத்தில் பேசிய பேச்சுகள். காணொளி ஆதாரம் Youtube-ல் இருக்கிறது.

மருத்துவர் இராமதாசு தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பேசுகிறார், PCR சட்டத்தில் திருத்தம் கோருகிறார் என கூப்பாடுபோட்ட ஊடகங்கள் அவர் ஏன் அப்படி பேசுகிறார். அப்படி என்ன ஞாயம் அவரிடத்தில் இருப்பதாக நினைக்கிறார் என்பதை அறிய முற்படவில்லை. பின்புலத்தில் திராவிட சூழ்ச்சி.

இச்சூழ்ச்சியின் பலனாக பா.ம.க வும், மருத்துவர் இராமதாசும் செய்த அனைத்து நற்ச்செயல்களும் மறைக்கப்பட்டு இவ்விணையதள போராளிகளால் சாதி வெறி கட்சியாகவும், சாதி வெறியராகவும் வசைபாடபட்டது.

இச்சம்பவம் பற்றி மருத்துவர் அன்புமணி சொன்ன ஒரு கருத்து : It’s an isolated incident. அதாவது இது ஒரு தனிப்பட்ட சம்பவம்.

தேவையில்லாமல் இச்சம்பவத்தில் அரசியலை நுழைத்து அசிங்கப்படுத்தியுள்ளன சில அரசியல் கட்சிகள். இதன் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் விரைவில்...


சூழ்ச்சியில் பா.ம.க – பாகம் 3

வியாழன், 4 ஜூலை, 2013

நான் விரும்பும் நாலு பேரு - ஊடகவியளாலர்கள், பத்திரிக்கையாளர்கள்...


இந்த பதிவு எனக்கு பிடித்த சில ஊடகவியலாளர்களைப் பற்றியது. இவர்கள் சின்னத்திரையில் செய்தி தொலைக்காட்சிகளில் பணிபுரிபவர்கள். பொதுவாக இவர்களை நான் அதிகம் காணுவது நேர்காணல் நிகழ்ச்சிகளில்தான்.

சரி, இனி அந்த ஊடகவியலாளர்கள் யார்..? அவர்கள் எந்தெந்த தொலைக்காட்சிகளில் பணிபுரிகிறார்கள் என பார்ப்போம்..


1. திரு.கண்ணன்


       இவருடைய பெயர் எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும். பாலிமர் தொலைக்காட்சியில் “மக்களுக்காக” எனும் நேர்காணல் நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்து வழங்குகிறார். நேர்காணலின் போது எப்போதும் புன்சிரிப்புடன் கூடிய மலர்ந்த முகத்துடன் காட்சியளிப்பார். மிக சிக்கலான கேள்விகளை சாமர்த்தியமாக சரியான தருணங்களில் கேட்பார். இந்த.. கிடுக்குப்பிடி-னு கேள்விப்பட்டிருக்கீங்களா...!!? அந்தமாதிரியான கேள்விகளை வெகு சாமர்த்தியமாக கேட்பார்.

ஒரு சில தலைவர்களிடம் சில கேள்விகளை கேட்கும்போது அவர்கள் கோவப்பட நேரிடும். அதுமாதிரியான கேள்விகளை மிக இலாவகமாக கையாள வேண்டும். அம்மாதிரியான கேள்விகளை கேட்பதில் இவர் சிறப்பாகவே செயல்படுகிறார்.

2. திரு.ஜென்ராம்

       இவர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் “அக்னிப் பரீட்சை” எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதுவும் ஒரு நேர்காணல் நிகழ்ச்சிதான். இவரிடமும் முகத்தில் ஒரு முதிர்ச்சி தெரியும். பார்த்த உடனேயே தெரிந்துவிடும் அரசியல் தலைவர்களிடத்தில் கேள்வி கேட்பதில் நிச்சயம் அனுபவம் மிக்கவராகதான் இருப்பார் என்று. முதலாமானவரைப் போலவே இவரும் மிகவும் சாமர்த்தியசாலி என்பதை கேள்விகளை கேட்கும்போதும், சில சமயங்களில் தலைவர்கள் கேட்கும் எதிர் கேள்விகளுக்கு சரியான தக்கதொரு பதிலை சமயோகிதப் புத்தியுடன் சொல்வதிலேயே தெரிந்துகொள்ளலாம்.

எனக்கு தெரிந்து இவரை நிகழ்ச்சியின்போது சிரித்தமுகத்துடன் பார்த்த்தே இல்லை. ஆனாலும் கேள்விகளை மிக நேர்த்தியாக கேட்பார்.

3.திரு.ரங்கராஜ் பாண்டே :

       இவர் தந்தி தொலைக்காட்சி நிருபர். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் எனக்கு பிடித்தது “கேள்விக்கென்ன பதில்” மற்றும் “ஆயுத எழுத்து” ஆகிய நிகழ்ச்சிகள்தான். இவரைப் பார்த்த உடனேயே சொல்லிவிடலாம் இவருக்கு அதிகப்படியான முன் அனுபவம் கிடையாது என்று.

தமிழ் ஊடகங்களில் ஒரு துடிப்பான இளம் ஊடகவியளார்.

இவர் “கேள்விக்கென்ன பதில்” நிகழ்ச்சியில் தனி நபர்களை பேட்டி காணும்போதும், “ஆயுத எழுத்து” நிகழ்ச்சியில் அழக்கப்பட்டுள்ள பிரமுகர்களிடம் கேள்விகளை தொடுக்கும் போதும் தன் நிலை உணர்ந்த ஒரு தெளிவான நிலையில் இவர் இருப்பதை காண இயலும். நிச்சயமாக இவர் பேட்டி காணும் அனைவரும் மிகப் பெரிய அனுபவசாலிகள்தான். அப்படிப்பட்டவர்களிடம் கேள்விகளை கேட்பதற்க்கு ஒரு பக்குவம் வேண்டும். அந்த பக்குவம் இவருக்கு இருக்கிறது. இருப்பினும் இவர் தாண்ட வேண்டிய கட்டங்கள் மிக அதிகமாக இருப்பதாகவே நினைக்கிறேன்.

4.ஹரிஹரன் :

       இவரும் தந்தி தொலைக்காட்சி நிருபர்தான். இவரும் “ஆயுத எழுத்து” நிகழ்ச்சியில் தோன்றுபவர். துடிப்புமிக்க அடுத்த இளம் ஊடகவியலார். இன்முகத்துடன் துடிப்புடன் இருக்கும் இவரது பேச்சுகள். அதிகம் அனுபவம் இல்லை என்பதை கண்டவுடன் உணர முடியும், இளைஞர் என்பதால். இருப்பினும் சாமர்த்தியமாக செயல்படுவார். எதிர் கேள்விகளை கையாள்வதில் இவரும் சிறப்பாகவே செயல்படுகிறார். இளம் ஊடகவியலாளர் என்பதால் ஏற வேண்டிய படிகள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன.


இவ்வூடகவியலாளர்கள் அனைவரும் மேன்மேலும் பல சிறப்புகளைப் பெற்று தங்கள் வாழ்வில் பல சாதனைகளை புரிந்து என்றும் இன்புற்று வாழ எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.
இவர்கள் அனைவரைவிடவும் நான் வயதில் இளையவன், இருப்பினும் வாழ்த்த வயது ஒரு தடையல்ல; மனம் இருந்தால் போதும் என்பதால் எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.

மேலும் இவர்களுடைய பெயர்கள் எதுவும் எனக்கு தெரியவில்லை, இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை. தெரிந்தவர் எவரேனும் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

புதன், 3 ஜூலை, 2013

வண்ண இடைவார் தர தேர்வு - தேக்வாண்டோ - நெய்வேலி

சில நாட்களுக்கு முன்பு கருப்பு இடைவார் தர தேர்வு-தேக்வாண்டோ எனும் தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன் அல்லவா..!!? கிட்ட தட்ட அதன் தொடர்ச்சிதான் இந்த பதிவு. கடந்த 29-06-2013 அன்று நமது ஒலிம்பியன் தேக்வாண்டோ கூட்டமைப்பு,நெய்வேலி-ன் மாணவர்களுக்கான வண்ண இடைவார் தர தேர்வு(Color Belt Grading) நடந்தது. இத்தேர்வானது ஒலிம்பியன் தேக்வாண்டோ கூட்டமைப்பு, நெய்வேலி-ன் செயலாளர் மாஸ்டர் திரு.K.வாசுதேவன் மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் மாஸ்டர். திரு.R.இரவிக்குமார் ஆகியோர் நேர்நிலையில் தமிழ் நாடு தேக்வாண்டோ அகாடமியின் தலைவர் மாஸ்டர் திரு.K.பாபு Vth Dan Black Belt அவர்களால் நடத்தப்பட்டது. இனி தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் புகைப்படங்களை காணலாம். 

அதற்கு முன்பாக, தேக்வாண்டோவின் வண்ண இடைவார்களை பற்றி சுருக்கமாக காணலாம்.

        1.        வெள்ளை இடைவார் (White Belt)
        2.        மஞ்சள் பட்டை இடைவார் (Yellow Stripe)
        3.        மஞ்சள் இடைவார் (Yellow Belt)
        4.        பச்சை பட்டை இடைவார் (Green Stripe)
        5.        பச்சை இடைவார் (Green)
        6.        நீல பட்டை இடைவார் (Blue Stripe)
        7.        நீல இடைவார் (Blue Belt)
        8.        சிவப்பு பட்டை இடைவார் (Red Stripe)
        9.        சிவப்பு இடைவார் (Red Belt)

இதற்கு அடுத்தபடியாக கருப்பு இடைவார். கருப்பு இடைவாரினை அவ்வளவு எளிதில் தேக்வாண்டோவில் அடைந்துவிட முடியாது. குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை தேவைப்படும். இக்கருப்பு இடைவாரில் I DAN, II DAN, III DAN, IV DAN, V DAN, VI DAN என ஆறு இடைவார் நிலைகள் உள்ளன. இவற்றைப்பற்றி சந்தர்ப்பம் வாய்த்தால் வேறொரு பதிவில் விரிவாக காணலாம்.

[மாஸ்டர்.திரு.R.இரவிக்குமார்]

        1.        வெள்ளை இடைவார் :
அனைத்து தற்க்காப்பு கலைகளிலும் முதல் நிலையில் இருப்பது இந்த வெள்ளை இடைவார் தான். வெள்ளை காகிதமாக இருக்கும் நாம் கற்க ஆரம்பிக்கும் நிலைதான் இந்த வெள்ளை இடைவார்.

        2.        மஞ்சள் பட்டை இடைவார் :
வெள்ளை இடைவாரிலிருந்து கிடைக்கும் முதல் தர உயர்வு இந்த மஞ்சள் பட்டை. வெள்ளை இடைவாரில் இரு மஞ்சள் நிறை பட்டைகள் தைக்கப்பட்டிருக்கும். இம்மஞ்சள் பட்டையிலிருந்து நமக்கு அறிய கிடைப்பது, தேக்வாண்டோவின் அடிப்படைகளை இவர் அறிந்துகொண்டுள்ளார் என்பதாகும். விதைக்கப்பட்டுள்ள விதையின் நிலை இம்மஞ்சள் பட்டை இடைவார்.

        3.        மஞ்சள் இடைவார் :
அதிகாலையில் மேலெழும் ஆதவனின் நிறம். இடைவார் முழுமையும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். விதைக்கப்பட்ட விதையானது முளைவிட்டு வெளிவரும் நிலை மஞ்சள் இடைவார். தேக்வாண்டோவின் அடிப்படைகளிலிருந்து நுனுக்கங்களை அறிந்து மேலெழும் நிலை இந்த மஞ்சள் இடைவார்.

        4.        பச்சை பட்டை இடைவார் :
மஞ்சள் இடைவாரில் முனைகளில் இரு பச்சை நிற பட்டைகள் தைக்கப்பட்டிருக்கும். வளரும் செடிக்கு உரமிட்டு நீர் பாய்ச்சும் நிலை.

        5.        பச்சை இடைவார் :
வளரும் மரத்தின்/செடியின் பசுமையை குறிப்பது. ஒரு வளரும் செடியானது எந்த அளவிற்க்கு பசுமையாக இருக்கிறதோ, அதேபோல் பச்சை இடைவார் நிலையை அடைந்த ஒருவரின் தேக்வாண்டோ கலை நுனுக்கமும், மனமும் பசுமையாகவும் தெளிவாகவும் இருக்கும்.

        6.        நீல பட்டை இடைவார் :
பச்சை இடைவாரின் முனைகளில் இரு நீல நிற பட்டைகள். வானத்தை நோக்கிய வளர்ச்சியின் நிலை இது.

        7.        நீல இடைவார் :
இடைவார் முழுவதும் நீல நிறத்தில் இருக்கும். இந்த நீல நிறம் வானத்தை குறிக்கும். நன்கு வளர்ச்சி அடைந்த மரமானது வானத்தை நோக்கி நிற்கும் நிலைதான் இந்த நீல இடைவார். அதுபோல தேக்வாண்டோவின் நுனுக்கங்களை நன்கு அறிந்துகொண்டதை குறிக்கும் நிலை இது.

        8.        சிவப்பு பட்டை இடைவார் :
நன்கு கற்றறிந்த நுனுக்கங்களை மெருகேற்றும் நிலை இது. நீல இடைவாரின் முனைகளில் சிவப்பு பட்டை தைத்திருத்தல்.

        9.        சிவப்பு இடைவார் :

இவ்விடைவார் முழுவதும் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது இவ்விடைவாரை அணிந்திருப்பவர் மிகவும் ஆபத்தானவர் என்பதை குறிக்கும். தனது எதிராளியை எச்சரிக்கும் நிறம் இது.