புதன், 30 செப்டம்பர், 2015

கலாய்க்கப்படும் கருணாநிதியின் மகன்

ஸ்டாலின் இந்த அளவிற்கு கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டு பகடி பேசப்படுவார் என்று தி.மு.க வினர் மட்டுமல்ல யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

நமக்கு நாமே என்ற திட்டத்தை ஏற்படுத்தி மக்களை நேரடியாக சந்திக்கப்போகிறேன் பேர்வழி என கிளம்பி மிகக் கடுமையான கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கப்பட்டு அவமானப்பட்டு நிற்கிறார்.

ஏன் திடீரென இப்படி ஒரு திட்டம்.!? உண்மையிலேயே மக்கள் மீது அக்கரைகொண்டா.!? ஆம் என்றால் இத்தனை ஆண்டுகளாக எங்கே சென்றார்.!? திடீரென எப்படி இந்த ஞானோதயம்.!? உண்மையில் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதல்ல இவர்கள் திட்டம்.

இவர்களின் திட்டமே வேறு.!

இவர்களின் இத்திட்டத்திற்க்கு காரணம், பாட்டாளி மக்கள் கட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசுதான்.! ஆமாம், தி.மு.க வின் செயல்பாடுகளை கவனிப்பீர்களேயானால், பா.ம.க வின் கொங்கு மண்டல மாநாட்டிற்க்கு பிறகு தி.மு.க வில் ஒரு பாரிய மாற்றத்தை நீங்கள் காணலாம்.

கொங்கு மண்ணில் பா.ம.க விற்கு கிடைத்த மக்கள் செல்வாக்கை கண்டு வெதும்பி பா.ம.க-வை மக்கள் மத்தியில் மறக்கடிக்க செய்ய நடத்தப்பட்டதுதான் “உரிமை மீட்பு பேரணி” எனும் பெயரில் கடலூர் புதுசத்திரத்தில் நடத்தப்பட்ட 18 மாவட்ட மாநாடு. இம்மாநாட்டில் “இது கோவிந்தசாமி படையாட்சியார் பிறந்தமண்”, “இது இராமசாமி படையாட்சியார் பிறந்தமண்” எனப் பேசிய ஸ்டாலினின் வார்த்தைகளிலிருந்து தி.மு.க வின் சாதீய பித்தலாட்டத்தை வெளிப்படையாகவே உணரலாம்.

உண்மையில் தி.மு.க பாட்டாளி மக்களின் வளர்ச்சியை கண்டு உள்ளபடியே பெரிதாக அச்சப்படுகிறது.! மேலும் தி.மு.க காலாவதியான மருந்தாக மாறிவிட்டது. அதனாலேயே பா.ம.கவின் அனைத்து செயல்பாடுகளையும் அப்படியே படியெடுத்து கொஞ்சமாக மாற்றி தி.மு.க-வின் செயல்பாடுகளை நிர்ணயிக்கின்றனர்.

பா.ம.க வின் மது ஒழிப்பு கொள்கையை மக்கள் மத்தியில் நீர்த்துபோக செய்ய தி.மு.க வும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அது ஒருவார காலத்துக்கு ஊடகங்களில் பெருத்த விவாதத்திற்கு ஆட்படுத்தப்பட்டது என்றால் அது மிகையாகாது. அவ்வாறு பேசி சிறிது பரபரப்பை ஏற்படுத்திவிட்டு பின் அமைதியானது தி.மு.க. அந்த அமைதிக்கும் காரணமில்லாமலில்லை. தமிழ்நாடு அரசுக்கு மது உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் பாதி தொழிற்சாலைகள் தி.மு.க-வினருடையதுதான். மீதி அ.தி.மு.க-வினருடையது. தி.மு.க-வினருடைய தொழிற்சாலைகள் பற்றி பேச்சு கிளம்பியதும் மது ஒழிப்பு பேச்சை தீவிரமாக பேசாமல் அப்படியே அமையாகிக்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக அன்புமணியை எப்படியேனும் வீழ்த்தியாக வேண்டும் என்பதற்காக தீட்டப்பட்ட திட்டம்தான் நமக்கு நாமே திட்டம். அதுவும் மருத்துவர் அன்புமணியின் பாணியிலேயே.! இத்திட்டத்தின் விளம்பர பதாகைகூட பா.ம.க உருவாக்கிய அமைப்பு முறை மாதிரியே கிட்டதட்ட அதே மாதிரியாக.!

இத்தனை ஆண்டுகள் ஆகியும் தனக்கு கிடைக்காத ஒரு வரவேற்பு எப்படி அன்புமணிக்கு கிடைத்தது என்பதன் விளைவாக வந்தது தான் பொதுமக்களை நேரடியாக எதார்த்தமாக சந்திக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் இந்த மாற்றம். ஆனால் இதிலும்கூட இவர்களின் போலித்தனத்தை காட்டியுள்ளனர். மொத்தத்தில் இவர்கள் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவர்கள் அல்ல என்பதை இவர்களே தோலுரித்து காட்டிக்கொள்கின்றனர். “நுணலும் தன் வாயாற் கெடும்” எனும் முதுமொழிக்கு தக்க உதாரணமாக தற்போதைய தி.மு.க-வின் செயல்பாடுகள் அமைகிறது.
மேலும் பா.ம.க-வின் முதல்நாள் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்ற அறிவிப்பு மக்களிடையே பெருத்த வரவேற்ப்பு பெற்றதையடுத்து தாங்களும் ஆட்சி அமைத்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என அறிவித்திருக்கின்றனர்.

தேர்தல் என்றால்தான் இவர்களுக்கு மக்களும் மக்களுக்கான பிரச்சினைகளும் நினைவுக்கு வரும் போலிருக்கிறது.!

சரி, தலைப்புக்கு வருவோம்...

இந்த மனுசன் நமக்கு நாமே கிளம்புனாலும் கிளம்பினாரு, இணைய சமூக தள பயன்பாட்டாளர்களுக்குதான் செம கொண்டாட்டம்.. இவர் ஊர் சுற்ற ஆரம்பித்த பிறகு வடிவேலு, கவுண்டமணி, சந்தானம் என அனைத்து நகைச்சுவை நடிகர்களுக்கும் ஏக போட்டியாக உருவெடுத்துவிட்டார்.

இந்த நகைச்சுவை நடிகர்களின் படங்களில் வரும் காட்சி அமைப்போடு ஸ்டாலின் அவர்களின் உடை, உடல்மொழி, சூழல் என ஏறக்குறைய எல்லாமுமே பொருந்திப்போவதுதான் சால ஆச்சரியம்.

சமூக ஊடகங்களான முகநூலிலும், ‘டிவிட்டரிலும்’ சில ஒளிப்படங்களை நீங்களும் காண்டு களியுங்கள்...













திராவிடத்தின் வீழ்ச்சியில்தான் தமிழரின் எழுச்சி அடங்கியிருக்கிறது.! தமிழ் வீறுகொண்டு எழ எழ திராவிடம் வீழும்.! விழித்திடு தமிழா விடியல் காண.!

படங்கள் : ஒளிப்படங்களை உருவாக்கி இணையத்தில் அனைவரும் பயன்படுத்தும்படி வெளியிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.